மயிலாடுதுறை, மே 3:நாகை மாவட்டம் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் வசித்து வரும்செந்தில் என்பவர் 2012ம் ஆண்டு மயிலாடுதுறை கிளை சிறைத்துறையிலிருந்து ஓய்வுபெற்ற முருகேசன் என்பவரிடம் ரூ.12லட்சம் 5பைசா வட்டிக்குக் கடன் வாங்கியுள்ளார்.
சிறுகச்சிறுக ரூ.38 லட்சம்வரை கட்டி முடித்துள்ளார். கடன் தொகை முடிந்ததும் அதற்கு ஈடாக வைத்திருந்த பூர்த்தி செய்யப்படாத செக்குகள், புரோ நோட்டுக்கள், வீட்டு பத்திரங்கள் போன்றவற்றை திருப்பி கேட்டதற்கு நான் வேறு நபரிடம் வாங்கி வட்டிக்குக் கொடுத்து வருகிறேன் விரைவில் வாங்கித் தருகிறேன் என்று கூறிவிட்டு 5 மாதம் கழித்து மீண்டும் ரூ.1 லட்சம் பணம் கொடுத்தால்தான் டாக்குமென்டுகளைத்தருவேன் என்று மிரட்டியுள்ளார்.மேலும் மேலும் மிரட்டவே செந்தில் இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர், எஸ்பி, முதல்வரின் தனிப்பிரிவு போன்றவற்றிற்கு நடவடிக்கைக்கோரி மனுக்களை அனுப்பிவிட்டு, கடந்த ஜனவரி 23ம்தேதி மாலை மயிலாடுதுறை ஆர்டிஓ தேன்மொழியிடமும் மனு ஒன்றை அளித்திருந்தார். அதன்பேரில் ஜனவரி 29ம்தேதி நடந்த பேச்சுவார்த்தையில் கந்து வட்டியால் பாதிக்கப்பட்ட 10க்கும்மேற்பட்ட நபர்கள் ஆர்டிஓ விசாரணைக்கு ஆஜரானார்கள். விசாரணைக்குப் பின்பு போலீசார் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படு வதாக ஆர்டிஒ தெரிவித்தார்.