கரூர், மே 3: கரூர் அருகம்பாளையம் சாலையில் சாலையோர குப்பையால் சுகாதாரகேடு ஏற்படுகிறது.கரூர் அருகே உள்ளது அருகம்பாளையம். வெங்கமேட்டில் இருந்து அருகம்பாளையம் செல்லும் சாலையில் சாலையோரம் குப்பைதொட்டிகள் நிறைந்து குப்பைகள் தெருவில் கொட்டப்பட்டுகிடக்கின்றன. மக்கும் குப்பைகளை ஆடுமாடுகள் மேய்கின்றன. காற்றில்பறந்தும் குப்பைகள் மக்கியும் சுகாதாரகேடு ஏற்படுத்தி வருகின்றது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், அருகம்பாளையம் பகுதியானது காதப்பாறை ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.