விருத்தாசலம், மே 3: அகில இந்திய கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் சங்கம் விருத்தாசலம் கோட்டம் சார்பில் விருத்தாசலம் கோட்ட தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்ட தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் வைரக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காலம் தாழ்த்தி வரும் அலுவலக வாடகை மற்றும் அலவன்சை உடனடியாக வழங்க வேண்டும். அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை, வருகிற 10ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் இல்லையெனில் 15ம் தேதி கோட்ட அலுவலகம் முன்பு, மத்திய மண்டல செயலாளர் சுவாமிநாதன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது உள்ளிட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டது.