நாமக்கல், ஏப்.26: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அரவக்குறிச்சி ஒன்றிய பகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அவைத்தலைவர் உடையவர் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் கலந்து கொண்டு பேசினார். நடைபெறவிருக்கும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளருக்கு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.