வேலூர் அருகே பாலியல் பலாத்கார முயற்சியில் சிறுமியை கொலை செய்த டிரைவருக்கு ஆயுள் தண்டனை: வேலூர் நீதிமன்றம் தீர்ப்பு

வேலூர், ஏப்.25: வேலூர் அருகே பாலியல் பலாத்கார முயற்சியில் 14 வயது சிறுமியை கொலை செய்த டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் மொரசபல்லி கிராமத்தை சேர்ந்தவர் சிவா(38). இவர் வேலூரில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 2009ம் ஆண்டு அந்நிறுவனம் சார்பில் வேலூர் அடுத்த நெல்வாய் கிராமத்தில் பிளாட் போட்டப்பட்டது. அப்போது நெல்வாய்க்கு டிரைவர் சிவா அடிக்கடி சென்று வந்தார். கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி அன்று அதேபகுதியை சேர்ந்த அனுபிரியா(14) என்ற சிறுமி விவசாய நிலத்திற்கு நடந்து சென்றார். அப்போது அங்கிருந்த சிவா, சிறுமியை பின்தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாராம். அவரிடமிருந்து சிறுமி தப்பியோடினார்.

அப்போது சிறுமியின் தலையை பிடித்து பாறாங்கல் மீது மோதி, பிளேடால் கழுத்தை அறுத்து, சிறுமியை நிர்வாணப்படுத்தி அருகே உள்ள கிணற்றில் வீசி கொலை செய்தார். இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் சிவாவை கைது செய்தனர். இந்த வழக்கு வேலூர் மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது வந்தது. இந்நிலையில் வழக்கை நீதிபதி குணசேகரன் நேற்று விசாரித்து கொலை வழக்கில் சிவாவுக்கு ஆயுள்தண்டனையும், தடயங்களை மறைத்ததற்கு 7 ஆண்டு தண்டனை மற்றும் ₹2 ஆயிரம் அபராதம் விதித்தார். தண்டனை காலத்தை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

Related Stories: