வேலூர், ஏப்.25: வேலூர் அருகே பாலியல் பலாத்கார முயற்சியில் 14 வயது சிறுமியை கொலை செய்த டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் மொரசபல்லி கிராமத்தை சேர்ந்தவர் சிவா(38). இவர் வேலூரில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 2009ம் ஆண்டு அந்நிறுவனம் சார்பில் வேலூர் அடுத்த நெல்வாய் கிராமத்தில் பிளாட் போட்டப்பட்டது. அப்போது நெல்வாய்க்கு டிரைவர் சிவா அடிக்கடி சென்று வந்தார். கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி அன்று அதேபகுதியை சேர்ந்த அனுபிரியா(14) என்ற சிறுமி விவசாய நிலத்திற்கு நடந்து சென்றார். அப்போது அங்கிருந்த சிவா, சிறுமியை பின்தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாராம். அவரிடமிருந்து சிறுமி தப்பியோடினார்.