புத்தக கண்காட்சி

கெங்கவல்லி, ஏப்.25: கெங்கவல்லி அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பு சார்பில், உலக புத்தக தினத்தையொட்டி புத்தக கண்காட்சி நடந்தது. இதையொட்டி, நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரிய மாணவ, மாணவியர்கள், பெரிய மாரியம்மன் கோயில் வளாகத்தை தூய்மை படுத்தினர். பின்னர் உலக புத்தக தின நிகழ்ச்சி நடந்தது. இதற்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் விசாலாட்சி தலைமை வகித்தார். இளநிலை விரிவுரையாளர் ஸ்ரீதர், ஊர்ப்புற நூலகர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை பணியாளர் கழகம் மாநில பொருளாளரும், கெங்கவல்லி கிளை நூலகருமான நீலமேகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

Related Stories: