தேனி/ வருசநாடு, ஏப்.25: வாட்ஸ்அப்பில் அவதூறாக பேசியதை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக 2ம் நாளாக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் பிச்சைமணி தலைமை வகித்தார். கார்மேக பூசாரி முன்னிலை வகித்தார். இதில் ஆண்கள், பெண்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது வாட்ஸ் அப்பில் அவதூறாக பேசியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது, ஆவேசமடைந்த பெண்கள் கையில் துடைப்பத்தை வைத்து தரையில் அடித்து தவறாக பேசியவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.