காரைக்குடி, ஏப்.25: பிரபல வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா மறைவுக்கு அழகப்பா பல்கலைக்கழக வரலாற்று துறையில் துணைவேந்தர் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னை மாநகரின் வரலாற்றை காலமுறைப்படி தொகுத்தவர் எஸ்.முத்தையா. இவர் கடந்த 20ம் தேதி இயற்கை எய்தினார். இவருக்கு அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுதுறை சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தலைமைவகித்து பேசுகையில், வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா கடந்த 1981ல் மெட்ராஸ் டிஸ்கவர் என்ற புத்தகத்தை வெளியிட்டார். சென்னையின் வரலாற்றை கி.பி 1638 முதல் 1947 வரை உள்ள ஆங்கிலேய ஆட்சியை பற்றிய தகவல்களை சேகரித்து புத்தகமாக வெளியிட்டவர்.