கொங்கணாபுரத்தில் ₹6 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

இடைப்பாடி, ஏப்.23:  இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் செயல்பட்டு வரும் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்து குவித்தனர். இதில், டிசிஎச் ரகம் குவிண்டால் ₹6400 முதல் ₹6840 வரையிலும், பிடி ரகம் ₹6000 முதல் ₹6399 வரையிலும் ஏலம் போனது. ஆக மொத்தம் 305 பருத்தி மூட்டை ₹6 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

Related Stories: