மேட்டூர் காவிரியில் மூழ்கி சேலம் கல்லூரி மாணவர் சாவு

மேட்டூர், ஏப்.23: மேட்டூரில் காவிரியில் குளித்த கல்லூரி மாணவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேட்டூர் அருகே கானாவசியூர் மூலக்காடு பகுதியை சேர்ந்த நாகப்பன் மகன் மூர்த்தி(22). சேலம் அரசு கலைக்கல்லூரியில் 2ம் ஆண்டு எம்எஸ்சி படித்து வந்தார். கல்லூரி விடுமுறை என்பதால், நேற்று நண்பர்களுடன் மேட்டூர் காவிரியில் குளிக்க சென்றுள்ளார். அணைக்கட்டு முனியப்பன் கோயில் அருகே, நீர்சுழல் உள்ள இடத்தில் குளித்த போது, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டூர் ேபாலீசார், சம்பவ இடத்திற்கு வந்து மூர்த்தி உடலை மீட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விசாரித்து வருகின்றனர். மட்டம் பகுதியில் அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுவதால், இதனை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: