நாமக்கல், ஏப்.23: பரமத்திவேலூரை அடுத்த செருக்கலை கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி, 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பரமத்திவேலூர் தாலுகா, செருக்கலை கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இல்லாததால், இப்பகுதி மக்கள் அன்றாட தேவைக்களுக்காக, 3 கிலோ மீட்டர் வரை சென்று பொது குழாயில் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
இப்பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து, தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட பெண்கள், காலி குடங்களுடன் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.