நாகை , ஏப்.22:நாகை அடுத்த புலவனூரில் தேர்தல் அன்று நூறு நாள் வேலை கொடுத்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் வலியுறுத்தி உள்ளனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் மோகனூர் ஊராட்சி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் மோகனூர் ராமமூர்த்தி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் சுரேஷ்குமாருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் மோகனூர் ஊராட்சிக்கு உட்பட்ட புலவனூர் கிராமத்தில் மக்களவை பொது தேர்தல் அன்று தேர்தல் ஆணையத்தால் 100 சதவீதம் வாக்கு பதிவை வலியுறுத்தி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த அன்று புலவனூர் கிராம மக்கள் வாக்களிக்க முடியாமல் ஜனநாயக கடமையை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணைய உத்தரவிற்கு எதிராக 18ம் தேதி அன்று 100 நாள் வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டு அன்று யார் எல்லாம் வேலைக்கு வருகிறார்களே அவர்கள் தான் வாரம் முழுவதும் வேலை செய்யலாம் என்று கூறி கட்டாயப்படுத்தி 100 நாள் வேலை செய்ய கட்டாயப்படுத்தினர்.