க.பரமத்தி, ஏப்.22: மே 23ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும் என முன்னாள் அமைச்சர் பெரியசாமி பேசினார்.அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலையொட்டி திமுக செயல்வீரர்கள், ஆலோசனை கூட்டம் க.பரமத்தியில் நடைபெற்றது.அரவக்குறிச்சி ஒன்றிய திமுக செயலாளர் மணியன் வரவேற்றார். க.பரமத்தி ஒன்றிய செயலாளர் .கருணாநிதி தலைமை வகித்தார். திமுக மாவட்ட பொறுப்பாளரும், வேட்பாளருமான செந்தில்பாலாஜி, திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும் சொத்து பாதுகாப்பு குழு செயலாளருமான கே.சி.பழனிசாமி, நெசவாளர் அணி தலைவர் நன்னியூர்ராஜேந்திரன், விவசாய அணி தலைவர் சின்னசாமி, காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஜோதிமணி, ஆகியோர் பேசினர்.கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது : வரும் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு டெபாசிட் கூட கிடைக்காது.