திருக்காட்டுப்பள்ளி, ஏப்.21: தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நிலத்தடிநீர் குறைந்து பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. மேலும் மக்கள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கால்நடைகளுக்கு வெப்ப நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. கோடை பயிர்கள் கருகும் நிலையும் உள்ளது. இதற்கு தீர்வு மழை மட்டுமே. முற்காலத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மழைக்கு உரிய தெய்வங்களான இந்திரன், வருணன் ஆகியோரை வழிபட ஜபங்கள் மற்றும் ஹோமங்கள் நடத்துவார்கள்.