ஜெயங்கொண்டம், ஏப். 19: ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட கிராமங்களான துளாரங்குறிச்சி, புதுக்குடி, மேலூர், தேவனூர், மருக்காலங்குறிச்சி, தண்டலை, குளத்தூர், உள்ளிட்ட 13 கிராமங்களில் விவசாயிகள் தங்களது நிலங்களை கையகப்படுத்தி 23 ஆண்டுகளுக்கு பின்னும் திட்டங்களை செயல்படுத்தாததால் தங்களது நிலங்களை திருப்பி கேட்டு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் மக்களவை தேர்தலை புறக்கணிப்போம் என்று மக்கள் அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பால் விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தோல்வியடைந்தது.