இளம்பிள்ளை, ஏப்.19: சேலம் அருகே இடங்கணசாலையில் இரவு 8 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை பகுதியானது நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டதாகும். இங்குள்ள அரசு நிடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் ஆண், பெண்கள் என மொத்தம் 1383 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மாலை 6 மணி வரையிலும் 900 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். அப்போது, மழை தூறிக்கொண்டிருந்ததால் ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தனர்.