இளம்பெண் மாயம்

கும்பகோணம், ஏப். 15: கும்பகோணம் அடுத்த இன்னம்பூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் அனுஷா (22). இவர், கடந்த 11ம் தேதி திருவையாறில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் திருவையாறுக்கு அனுஷா செல்லவில்லை. இதையடுத்து பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சுவாமிமலை காவல் நிலையத்தில் அனுஷாவின் தாய் புவனேஸ்வரி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: