ஓட்டலில் சிக்கன் கேட்டு தகராறு தாய், மகனுக்கு உருட்டுக்கட்டை அடி தடையை மீறி விற்பனை இறைச்சிகள் பறிமுதல்

பண்ருட்டி, ஏப். 18: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வடக்கிருப்பு பகுதியை சேர்ந்தவர் நவநீதம் கோபாலகிருஷ்ணன் மனைவி ராஜகுமாரி (55). இவர் காட்டுக்கூடலூர் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர் ஓட்டலில் இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த முத்து மகன்கள் விஜி என்கிற கலைச்செல்வன் (29), முகுந்தன் (22), அவர்களது நண்பர் வெங்கடேசன் மகன் மணிகண்டன் (21) ஆகிய 3 பேரும் வந்து சிக்கன் கறி கேட்டுள்ளனர். அதற்கு ராஜகுமாரி பணம் கேட்டபோது எங்கள் இடத்திலேயே கடை வைத்துவிட்டு எங்களிடம் பணம் கேட்கிறாயா? என்று கேட்டு தகராறு செய்துள்ளனர். அப்போது விஜி உருட்டுக்கட்டையை எடுத்து ராஜகுமாரியை தாக்கினார். தடுக்க வந்த அவரது மகனும் தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த இருவரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி ராஜகுமாரி அளித்த புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்கு பதிந்து மூவரையும் கைது செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: