விஷ பூச்சி கடித்து முதியவர் பலி

பண்ருட்டி, ஏப். 17: பண்ருட்டி அருகே கீழகொல்லையை சேர்ந்தவர் தண்டபாணி(95). முந்திரி விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டு கூரையில் கை வைத்தபோது விஷ பூச்சி ஒன்று கடித்துள்ளது. இதில் காயமடைந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தண்டபாணி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் முத்தாண்டிகுப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: