மன்னார்குடி, ஏப்.12: மன்னார்குடி அருகே டூவீலரில் சென்ற தனியார் நிதி நிறுவன பெண் ஊழியரை பட்டப்பகலில் தாக்கி 5 பவுன் மதிப்பிலான தாலிச்செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி களவாய்க்கரை கே.கே.நகரை சேர்ந்தவர் அண்ணாமலை(46). இவரின் மனைவி கற்பகம்(40). இவர் மன்னார்குடியில் இயங்கும் தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் பிரிவில் வேலை பார்த்து வந்தார். மேலும் இவர் கிராமங்களில் மகளிர் சுய உதவி குழுக்களில் கடன் பெற்றவர்களிடமிருந்து தினந்தோறும் பணம் வசூலித்து வருவது வழக்கம். இந்நிலையில் கற்பகம் நேற்று மன்னார்குடியில் இருந்து ரிஷியூர், கர்ணாவூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பணம் வசூல் செய்வதற்காக தனது டூவீலரில் சென்றுள்ளார். அப்போது வாஞ்சியூர் கர்ணாவூர் இடையே உள்ள சாலையில் செல்லும்போது பைக்கில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் கற்பகம் ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதியுள்ளனர். அதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரின் கழுத்திலிருந்த தாலி செயினை மர்ம நபர் பறிக்க முயன்றுள்ளார்.