குடவாசல் ஒன்றிய பகுதிகளில் நாகை எம்பி தொகுதி வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரிப்பு

திருவாரூர், ஏப்.12: நாகை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக நேற்று குடவாசல் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய பகுதிகளில் பொதுமக்களிடம் அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நாகை எம்பி தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக தாழை.சரவணன் போட்டியிடும் நிலையில் அவருக்கு ஆதரவாக அமைச்சர் காமராஜ் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று குடவாசல் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட எரவாஞ்சேரி, தேதியூர், விஷ்ணுபுரம், அதம்பார், நெம்மேலி, மருதுவாஞ்சேரி, அய்யன்பேட்டை, கிள்ளியூர், ஆலத்தூர், சுரைக்காயூர், திருப்பாம்புரம், செருகுடி, வடுககுடி, திருவிழிமிழலை, வடமட்டம், சற்குணேஸ்வரபுரம்,  மருத்துவக்குடி, கூந்தலூர், கடலங்குடி ஆகிய பகுதிகளிலும், தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட புதுக்குடி, கண்டரமாணிக்கம் பிலாவடி, சீதக்கமங்கலம், விக்கிரபாண்டியம், சித்தாடி, ஆடிபுலியூர், செருகளத்தூர், பருத்தியூர், வடவேர், திருவிடைச்சேரி, நாரணமங்கலம், நெடுஞ்சேரி, சேங்காலிபுரம், அன்னவாசல், காங்கேயநகரம், மேலப்பாளையூர், மனபறவை, மஞ்சக்குடி, புதுக்குடி, சிமிழி, பெரும்பன்னையூர்,  நெய்க்குப்பை உட்பட பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் நிலையான ஆட்சி அமையவும், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் தொடர்ந்து நடைபெறவும் வேட்பாளர் சரவணனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Related Stories: