திருச்சி, ஏப்.9: மேயராக இருந்தபொழுது செய்த சாதனைகளை சொல்லி அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் நேற்று திருச்சி மாநகரில் நேற்று பரிசுபெட்டகம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். திருச்சி பாராளுமன்ற அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் நேற்று காலை திருச்சி மேற்கு தொகுதி, ஜங்ஷன் பகுதிக்குட்பட்ட கருமண்டபம் , ராம்ஜிநகர்,பிராட்டியூர் ,கொத்தமங்கலம் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்று மாலை திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட தில்லைநகர், பீமநகர், கூனிபஜார், உக்கிரகாளியம்மன் கோவில், தென்னூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுக்களிடம் பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். திருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் ராமலிங்கம், ஜங்ஷன் பகுதி கழக செயலாளர் தன்சிங் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். பொதுமக்களிடையே வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் பேசியதாவது: