கரூர், ஏப். 9: கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே பகவதியம்மன் கோயிலில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அடுத்துள்ள கோடங்கிப்பட்டியில் பகவதியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் பூசாரி கருணாகர பெருமாள் லாலாப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கடந்த 5ம் தேதி இரவு மர்ம நபர்கள் கோயிலின் முன்பக்க கதவை உடைத்து ரூ.2 ஆயிரம் பணம் மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள கலச வெண்கலப் பொருட்களை திருடி சென்றதாக கூறியிருந்தார். அதன்பேரில் லாலாப்பேட்டை போலீசார் இந்த பகுதியை சேர்ந்த மூன்று வாலிபர்களிடம்
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.