தோகைமலை அருகே மதுபானங்கள் பதுக்கிவிற்றவர் கைது

தோகைமலை, மார்ச். 4: தோகைமலை அருகே கழுகூர் ஊராட்சி அக்காண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி (47). இவர். அதே பகுதியில் உள்ள தனது வீட்டின்பின் பகுதியில் சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்ததாக தெரிகிறது. தகவலறிந்த தோகைமலை போலீசார் விரைந்து சென்று மதுபானங்களை பறிமுதல் செய்து சின்னத்தம்பியை கைதுசெய்தனர்.

 

Related Stories: