பேராவூரணி, ஏப். 5: பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சியில் வீடுவீடாக சென்று தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. மக்களவை தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சி மூலம் 18 வார்டுகளிலும் 4 வாகனங்கள் மூலம் வீடுவீடாக சென்று தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு, யாருக்கு வாக்களித்தோம் என வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒப்புகை சீட்டுடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் கூடிய வாக்காளர் விழிப்புணர்வு வாகனம் மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.