மன்னார்குடி அருகே நிலப்பிரச்னையில் வாலிபர் மீது தாக்கு ஒருவர் கைது

மன்னார்குடி, ஏப்ரல் . 4:  மன்னார்குடி அருகே நிலப்பிரச்னையில் வாலிபரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள கோவிந்தநத்தம் காலனி தெருவை சேர்ந்தவர் சக்திவேல்(20). அதே பகுதியை சேர்ந்தவர் சேகர்(45). இவர்கள் இருவருக்கும் இடையே சில மாதங்களாக நிலப்பிரச்னை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இருவரிடையே நிலப் பிரச்னை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. இதில் சேகர், சக்திவேலை இரும்பு பைப்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சக்திவேலை அருகில் இருந்தவர்கள் மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 இதுகுறித்த புகாரின் பேரில் பரவாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர்.

Related Stories: