கொள்ளிடம், ஏப்.4: கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் கடத்தி வந்த லோடு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவரை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே தைக்கால் மணி நகரை சேர்ந்த முகம்மது ஷரிப் மகன் முகம்மது யாசின் (45). இவர் நேற்று கொள்ளிடம் ஆற்றிலிருந்து லோடு ஆட்டோவில் மணலை கடத்திக்கொண்டு தைக்கால் பகுதியில் உள்ள ஒருவர் வீட்டிற்கு கொண்டு சென்றார். தகவலறிந்த கொள்ளிடம் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தைக்கால் மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்த லோடு ஆட்டோவை மணலுடன் பறிமுதல் செய்து வேனை ஓட்டிச் சென்ற முகம்மதுயாசினை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.