டூவீலர் மோதி முதியவர் பலி

தேவதானப்பட்டி, ஏப்.3: தேவதானப்பட்டியில் டூவீலர் மோதியதில் நடந்து சென்ற முதியவர் பலியானார். தேவதானப்பட்டி அண்ணாநகரை சேர்ந்த அய்யாவு(70) என்பவர் பஸ் ஸ்டாப்பில் இருந்து அண்ணாநருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். தேவதானப்பட்டி அரசு மருத்துவமனை அருகே செல்லும் போது பின்னால் டூவீலரில் வந்த வேல்நகரை சேர்ந்த கிருஷ்ணன்(50) என்பவர் அய்யாவு மீது பலமாக மோதியுள்ளார். சம்பவ இடத்தில் கால் முறிவு ஏற்பட்டு அய்யாவும், டூவீலரில் இருந்து கீழே விழுந்த கிருஷ்ணன் என்பவரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி அய்யாவு உயிரிழந்தார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: