குன்னூர், மார்ச் 28: பாரஸ்ட் டேல் பகுதியில் சாலைப்பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள பாரஸ்ட் டேல் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து மருத்துவமனை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல குன்னூர் வரவேண்டியுள்ளது. பாரஸ்ட் டேல் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புதிய தார் சாலை அமைப்பதற்காக பூமி பூஜை பேடப்பட்டது. பின்னர் சாலை பணிகளுக்காக பழைய சாலை பொக்லின் இயந்திரம் உதவியுடன் தோண்டப்பட்டது. பின்னர் சாலைப்பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், அப்பகுதியில் உள்ள பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.