சீர்மரபினர் நல வாரியத்தில் நலத்திட்ட உதவிகளை பெற விண்ணப்பிக்கலாம்

 

ஊட்டி, ஜூன் 25: தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில், தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது. இவ்வாரியத்தில், பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் கடந்த 2008ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கல்வி உதவித்தொகை மற்றும் திருமண உதவித்தொகை வழங்கப்படுகிறது. திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை ஆகியவைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மூக்கு கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல் மற்றும் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நலத்திட்ட உதவிகள் பெற சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்கள் 18வயது முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்) நீலகிரி மாவட்டத்தில் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும், ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்தோர்கள் தங்கள் உறுப்பினர் பதிவினை விரைவில் புதுப்பித்துக்கொள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியரின் கூடுதல் அலுவலக கட்டிடத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சீர்மரபினர் நல வாரியத்தில் நலத்திட்ட உதவிகளை பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: