குடியாத்தத்தில் இளம்பெண் காரில் கடத்தல்

வேலூர், மார்ச் 28: குடியாத்தம்  தர்மம்பேட்டை பாலகங்காதர தெருவை சேர்ந்தவர் 19 வயது பெண். இவர் ப்ளஸ் 2 தேர்வு முடித்து விட்டு வீட்டில் இருந்தார். இந்நிலையில், நேற்று மாலை கடைக்கு செல்வதற்காக கூறி அப்பகுதியில் உள்ள கடை வீதிக்கு வந்தார். அப்போது அவ்வழியாக வந்த வேலூர் பெருமுகை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(27) என்பவர் இளம் பெண்ணை காரில் கடத்தி சென்றதாக பெண்ணின் பெற்றோருக்கு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து, இளம் பெண்ணின் பெற்றோர் குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Related Stories: