மணல் திருட்டு ஒருவர் கைது

திருச்சுழி, மார்ச் 26: திருச்சுழி அருகே, அனுமதியின்றி மணல் அள்ளியது தொடர்பாக ஏற்கனவே 2 பேரை கைது செய்த போலீசார், மேலும் ஒருவரை கைது செய்தனர். திருச்சுழி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார், ஆலடிபட்டி-இலுப்பையூர் சாலையில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மணல் அள்ளி வந்த லாரிகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். இது தொடர்பாக சாமிநத்தம் சதீஸ்குமார் (24), கரிசல்குளத்தை சேர்ந்த இருளன் (20) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான மூவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கருணாநிதி என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Related Stories: