பேரையூர், மார்ச் 26: சேடபட்டி அருகே சாலை அமைக்க ஜல்லி கற்கள் கொட்டி 6 மாதமாகியும் சாலை அமைக்காததால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஜம்பலப்புரம்-அத்திபட்டி சாலை. இந்த சாலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சாலை போடுவதாககூறி ஜல்லிகள் கொட்டப்பட்ட நிலையில் எந்த வேலையில் நடக்காமல் கிடக்கிறது.
இதனால் இந்த வழியாக சேடபட்டி மற்றும் சேடபட்டி அரசு மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள் அத்திபட்டி, ஜம்பலப்புரம் வழியாக செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இங்கு பிரசித்திபெற்ற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்கும் அத்திபட்டி புதுமரியம்மன்கோவில் திருவிழா வருகின்ற ஏப்ரல் 21ந் தேதி தொடங்கி ஏப்ரல் 30ந் தேதி வரை நடைபெறவுள்ளது.