தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பு மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் தேர்வு

சிவகங்கை, மார்ச் 22: சிவகங்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் தண்டியப்பன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன், மாநிலக்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ், மாவட்ட அமைப்பாளர் சின்னத்துரை ஆகியோர் பேசினர். பேரவையில் புதிய மாவட்ட செயலாளராக வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டார். செயற்குழு உறுப்பினர்களாக தண்டியப்பன், முத்துராமலிங்கபூபதி, கருப்புச்சாமி, மோகன், கந்தசாமி, அய்யம்பாண்டி, திருநாவுக்கரசு, ஆறுமுகம் ஆகியோரும் மற்றும் 31 மாவட்டக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியினரின் வெற்றிக்காக தீவிரமாக பணியாற்றுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: