கடலூர், மார்ச் 22: அதிமுக தலைமையிலான கூட்டணியில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் அறிமுக கூட்டம் கடலூரில் நடந்தது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: அதிமுக என்றால் ஞாபகம் வருவது தொட்டில் குழந்தை மற்றும் சத்துணவு உள்ளிட்ட திட்டங்கள். சமூக நீதிக்காக பாமக, அதிமுக மட்டுமே தீவிரமாக போராடியது. தமிழக உரிமைக்காக பாமக, அதிமுக என்றென்றும் போராடும். அதிமுகவிடம் எழுப்பப்பட்ட 10 கோரிக்கைகள் மத்திய, மாநில அரசுகள் சம்பந்தப்பட்டது. தேர்தலுக்கு பிறகு கோரிக்கைகளை நிறைவேற்றும் முயற்சிகளை பாமக மேற்கொள்ளும்.