நீடாமங்கலத்திலிருந்து திருவண்ணாமலைக்கு ரயிலில் 945 டன் நெல் மூட்டைகள் அரவைக்காக அனுப்பி வைப்பு

நீடாமங்கலம், மார்ச் 22: திருவாரூர் மாவட்டம், நீடாமங்லம், மன்னார்குடி பகுதியிலிருந்து நெல் மற்றும் அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டு  நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டத்திற்கு ரயில் வேகன்களில் பொது விநியோகத்திட்டத்திற்கு அரிசியும், அரவைக்காக நெல்

மூட்டைகளும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று  நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு கிடங்குகள் மூவாநல்லூர் பகுதியிலிருந்து 75 லாரிகளில் 945 டன் சன்ன ரக நெல் மூட்டைகள் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து 21 சரக்கு வேகன்களில் திருவண்ணாமலை மண்டலத்திற்கு அரவைக்கு தொழிலாளர்கள் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Related Stories: