திருத்துறைப்பூண்டி நகர பகுதியில் குறும்படம் மூலம் நூறு சதவீதம் வாக்களிப்பது குறித்து பிரசாரம்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 22:  திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில்  தேர்தலில் நூறு சதவீதம்  வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து பிரசாரம் செய்து  வருகின்றனர்.  செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் வாகனத்தில் தேர்தல் குறித்து  விழிப்புணர்வு குறும்படம் திருத்துறைப்பூண்டி நகர பகுதிகளில் 10க்கும்  மேற்பட்ட இடங்களில் நகராட்சி ஆணையர் (பொ) பாஸ்கர், சுகாதார ஆய்வாளர்  வெங்கடாசலம் ஆகியோர் மேற்பார்வையில் பொதுமக்களுக்கு காண்பிக்கப்பட்டது.

Related Stories: