திருத்துறைப்பூண்டி, மார்ச் 22: திருத்துறைப்பூண்டி அருகே பாமணி ஊராட்சி தேசிங்குராஜபுரம் பகுதியிலுள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியில் பொது சுகாதாரத்துறையினர் குளோரின் அளவு சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்தனர். திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகர பகுதியிலுள்ள கிராமங்கள், நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பல கிராமங்கள், மன்னார்குடி தாலுகாவில் ஒரு சில கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனைகளில் இதுவரை சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிசிச்சை பெற்று சென்றுள்ளனர். தற்போது திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் 11க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.