கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்தில் அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு கோலம் ஊழியர்கள் அசத்தல்

கந்தர்வகோட்டை, மார்ச் 22: கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்களித்து சிறந்த இந்தியாவை உருவாக்குவோம் என தாலுகா அலுவலக ஊழியர்கள் கலர் கோலம் போட்டு அசத்திருந்தது அனைவரையும் கவர்ந்தது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு தற்போது வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என அரசு தரப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மனித சங்கிலி, கையெழுத்து இயக்கம் என்ற வரிசையில் கலர் கோலம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். கோலங்களை தாலுகா அலுவலக ஊழியர்கள் ஆர்வத்துடன் வரைந்தனர். தாலுகா அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் இதனை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.சிறந்த இந்தியாவை உருவாக்குவோம், வாக்களிப்பதில் பெருமை கொள்வோம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய கோலங்கள் போடப்பட்டிருந்தன.

Related Stories: