கந்தர்வகோட்டையில் உயரமான வேகத்தடையால் வாகனங்கள் சிக்கித்தவிப்பு

கந்தர்வகோட்டை, மார்ச் 22:  கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள உயரமான வேகத்தடையால் வாகனங்கள் சிக்கித்தவிக்கிறது. கந்தர்வகோட்டையில் பழைய பேருந்து நிலையம் அருகே திருச்சி சாலையில் சில தினங்களுக்கு முன் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டது. இந்த வேகத்தடை சற்று உயரமாக அமைத்திருப்பதால் அவ்வழியாக செல்லும் கனரக வாகனங்கள் வேகத்தடையில் மாட்டிக் கொள்வதால் போக்குவரத்தில் அடிக்கடி தடை ஏற்படுகிறது. உடனே இந்த வேகத்தடையின் உயரத்தை சற்று குறைப்பதால் சாலை போக்குவரத்தில் இடைஞ்சல் ஏற்படாமல் இருக்கும். மேலும் அந்த சாலை முடங்கி போகாமல் இருக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். தேர்தலை காரணம் காட்டி வேகத்தடையை புணரமைக்காமல் இருக்க கூடாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: