காரைக்கால், மார்ச் 22: தேசிய பெண் குழந்தைகளுக்கான இடைநிலைக் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தில் பயன்பெறுவோர், உரிய நகல்களை ஏப்ரல் 1 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அல்லி அறிவித்துள்ளார். இது குறித்து, காரைக்கால் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அல்லி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2016-17ம் கல்வியாண்டில் 9ம் வகுப்பு பயிலும்போது, தேசிய பெண் குழந்தைகளுக்கான இடைநிலை கல்வி ஊக்குவிப்பு திட்டத்தில் பயனடைய விண்ணப்பித்த அட்டவணை இனத்தை சேர்ந்த மாணவியருக்கு மட்டும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.