கரூர், மார்ச் 22: கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் வேலாயுதம்பாளையம் பகுதியில் பதநீர் மற்றும் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது.
மதுரை சேலம் பைபாஸ் சாலையில் கரூர் மாவட்ட எல்லை கரூரில் இருந்து வேலாயுதம்பாளையம் வரை உள்ளது. முக்கிய பைபாஸ் சாலை என்பதால் போக்குவரத்தும் அதிகளவு உள்ளது.கடந்த ஒரு மாதமாக கரூர் மாவட்டம் முழுதும் சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதக்கி வருகிறது. இந்நிலையில் பைபாஸ் சாலையில் செல்லும் பொதுமக்களை குறி வைத்து, சாலையோரம் பதநீர் மற்றும் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது.