கருப்பம்பாளையம் பகுதியில் பராமரிப்பின்றி போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையால் அவதி

கரூர், மார்ச் 22: கருப்பம்பாளையம் பகுதியில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் அருகே உள்ள கருப்பம்பாளையத்தில் சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. பராமரிப்பின்றி போனதால் சாலை மிகவும் மோசமான நிலையில் போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக இருக்கிறது. பலமுறை ஊராட்சி அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக சாலையை சீரமைக்க ஆவன செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: