ஆலங்குடி அருகே வடகாடு பாலசுப்பிரமணியர் கோயிலில் பால்குட விழா

ஆலங்குடி, மார்ச் 21: ஆலங்குடி அருகேயுள்ள  வடகாடு பாலசுப்பிரமணியர் கோயில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம்  எடுத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி  அருகேயுள்ள வடகாடு தோழன்பட்டியில் உள்ளபாலசுப்பிரமணியர் கோயில் திருவிழா  கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

தொடர்ந்து கோயிலில்  சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. இதில்,பெண்கள்,  குழந்தைகள் உள்பட  ஏராளமானோர் பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்று  கோயிலை அடைந்தனர்.  தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த  சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

Related Stories: