மது விற்றவர் கைது

கறம்பக்குடி, மார்ச் 21: கறம்பக்குடி கச்சேரி வீதி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (40). இவர் அனுமதியின்றி மதுபானம் விற்பதாக வந்த தகவலையடுத்து கறம்பக்குடி சப்.இன்ஸ்பெக்டர் ரூபிணி தலைமையில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கறம்பக்குடி மீன் மார்கெட் பகுதியில் அனுமதியின்றி ஆறுமுகம் மது விற்றுக்கொண்டிருந்தார். இதையடுத்து அவரிடமிருந்து 15 மது   பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.

Related Stories: