புதுக்கோட்டை, மார்ச் 21: வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 பொதுத்தேர்வு நிறைவு நாளில் மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார். பள்ளியின் 12ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் தேர்வுகளை நல்லமுறையில் எழுதி நிறைவு நாளில் முதல்வர் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து தங்களுக்கு நல்ல முறையில் பாடம் நடத்தியதோடு மட்டுமல்லாமல் மிகுந்த அக்கறையொடு கவனித்துக் கொண்டதற்காக நன்றி தெரிவித்தனர். அப்போது முதல்வர் பேசுகையில்,
போட்டிகள் நிறைந்த உலகத்தில் போராடினால்தான் வெற்றியைச் சுவைக்க முடியும். ஆகவே எதிர்காலத்தை மகிழ்வானதாக்கி கொள்ள நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புடனும் கவனமுடனும் செயல்படவேண்டும் என்றார்.