புதுக்கோட்டை, மார்ச் 21: புதுக்கோட்டை அடப்பன்வயல் பகுதியில் குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை அடப்பன்வயல் பகுதியில் கடந்த 21 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நகராட்சி அலுவலகத்தில் புகார் செய்தனர். அந்த பகுதியில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் உடைப்பை சரிசெய்து விடுவதாக தெரிவித்தனர். ஆனால் இதுவரை உடைப்பை சரிசெய்யவில்லை. எனவே குடிநீர் வழங்காததை கண்டித்து அடப்பன்வயல் 3&ம் வீதியை சேர்ந்த ஆண்களும் பெண்களும் பால்பண்ணை ரவுண்டானாவில் காலி குடங்களுன் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.