கூத்தாநல்லூர்,மார்ச்21: மாநிலத்தில் திமுக, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வருவதற்கு சிறுபான்மையின மக்கள் தவறாது வாக்களிக்க வேண்டும் என காங்கிரஸ் ஊடகப்பிரிவு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்தியதேசியகாங்கிரஸ் கட்சியின் திருவாரூர் சட்டமன்றத் தொகுதி சிறுபான்மை சமூகஊடகப்பிரிவின் பொதுக்குழுகூட்டம் கூத்தாநல்லூரில் நடைபெற்றது. கூட்டத்தில் கூத்தாநல்லூரில் உள்ளஇஸ்லாமிய , கிறிஸ்தவஅமைப்புக்களைஉள்ளடக்கிய சிறுபான்மைசமூகமக்கள்அனைவரும் பாசிசபாரதிய ஜனதாகட்சிக்கும், மக்கள்விரோத தமிழக அதிமுக. கட்சிக்கும் எதிராக வாக்களித்து, மாநிலத்தில்திமுக. தலைமையிலானஆட்சியைiயும், மத்தியில்காங்கிரஸ் தலைமையிலானஆட்சியையும் கொண்டு வர பாடுபட வேண்டும்.