மன்னார்குடி, மார்ச்21: மன்னார்குடி நகராட்சி ஆணையர் (பொ ) உத்தரவின் பேரில் சிறப்பு கண் காணிப்பு குழு பலசரக்கு கடை ஒன்றிலிருந்து அரசால் தடை செய்யப் பட்ட ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு ரூ 5 ஆயிரம் அபராதமும் விதித்தனர். சுற்றுச் சுழலை மாசுப்படுத்தும், நீலத்தடி நீர் மட்டத்தை வெகுவாக பாதிக்கும் ஒரு முறை மட்டும் உபயோகப்படுத்தி விட்டு தூக்கி எறியும் 14 வகையான அபாய கரமான பிளாஸ்டிக் பொருட்களை தமிழகம் முழுவதும் ஐனவரி 1ம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்து சட்டம் இயற்றியது. மேலும் தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மொத்தமாக விற்பனை செய்வது , கிடங்குகளில் சேமித்து வைப்பது, கடைகளின் முலம் பொது மக்களுக்கு விற்பனை செய்வது போன்றசெயல்களில் ஈடுபடுவோருக்கு பறிமுதல் செய்யப் படும் பொருள்களுக்கு ஏற்ப அபதாரம் விதிப்பதோடு நீதிமன்ற நடவடிக்கையும் மேற்கொள்ள படும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது.