விஷம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை

வேதாரண்யம், மார்ச் 21:  வேதாரண்யம் தாலுகா பன்னாள் நடுகாட்டு பகுதியை சேர்ந்த அழகியமாறன் வயது (19). ஒன்பதாம் வகுப்பு படித்த இவர் தற்போது சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு அதிக குடிப்பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் பெற்றோர்கள்  அழகியமாறனை குடிபழக்கம் வேண்டாம் என கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அழகியமாறன் வீட்டில் இருந்த விஷத்தை குடித்துவிட்டு ஆபத்தான நிலையில் கிடந்தார். அவரை உடனே வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அழகியமாறன் பரிதாபமாக இறந்தார். புகாரின் பேரில் வாய்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: